ஊரடங்குச் சட்டம் மற்றும் புத்தாண்டு கால சம்பிரதாய நடைமுறைகள் தொடர்பான அரசாங்கத்தின் வேண்டுகோள் - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 9 ஏப்ரல், 2020

ஊரடங்குச் சட்டம் மற்றும் புத்தாண்டு கால சம்பிரதாய நடைமுறைகள் தொடர்பான அரசாங்கத்தின் வேண்டுகோள்

கொரோனா தொற்று பரவல் அபாய வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நீடித்து நடைமுறையில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று, ஏப்ரல் 09ஆம் திகதி, காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு, இன்று பிற்பகல் 04.00 மணிக்கு மீண்டும் நடைமுறைக்கு வரும்.

இந்த மாவட்டங்களில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் - மீண்டும், ஏப்ரல் 14ஆம் திகதி, செவ்வாய், காலை 06.00 மணிக்கு நீக்கப்பட்டு, அன்றைய தினமே பிற்பகல் 04.00 மணி முதல் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

கொரோனா நோய்க்கிருமி  பரவுவதைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுகின்ற ஊரடங்குச் சட்டம் மற்றும் ஏனைய நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் சிரமங்களையும் இடர்களையும் - தெளிவுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொள்ளளுகின்றது.

மேலும் - புத்தாண்டு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும் தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு மக்கள் வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகப் பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியா வழங்கல்ளை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலேனும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலைத் தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே இருக்கும்.

எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது அவற்றிலிருந்து வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages