இன்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 1 ஏப்ரல், 2020

இன்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, யாழ்ப்பாணம், கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அவ்வாறே தொடரும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் - இன்று காலை தற்காலிகமாக நீக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், இன்று பிற்பகல் 2:00 மணிக்கு மீண்டும் நடைமுறைக்கு வரும்.

அந்த மாவட்டங்களில் - மீண்டும், ஏப்ரல் 6ஆம் திகதி, திங்கட்கிழமை, காலை 6:00 மணிக்குத் தற்காலிகமாக நீக்கப்படும் ஊரடங்குச் சட்டம் - அன்றைய தினமே, மீண்டும் பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்கு வரும்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் - ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு எவரும் பயணிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது .


Post Bottom Ad

Responsive Ads Here

Pages