கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் மட்டுநகரில் ஸ்தாபிதம்! பொறுப்பதிகாரியாக IP மேனன் நியமனம்! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 5 ஜூன், 2025

கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் மட்டுநகரில் ஸ்தாபிதம்! பொறுப்பதிகாரியாக IP மேனன் நியமனம்!

கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பில் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது. பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீயசூரயவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கிழக்குமாகாண சிரேஸ்ர பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெசுந்தரவும் கலந்துகொண்டார். கிழக்கு மாகாண குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியாக காரைதீவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் பதில் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டார். காரைதீவைச் சேர்ந்த பொலிஸ் மேனன் இறுதியாக மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியாக பணியாற்றியவராவார். இந்த பிரிவு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் செயற்படும்.


 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages