காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் வழங்கிவைப்பு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 2 ஜனவரி, 2023

காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் வழங்கிவைப்பு !


காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை பூர்த்திசெய்யும் வகையில்  காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயம் ஒரு தொகுதி மருந்து பொருட்களை வழங்கியுள்ளது.

ஆலய பரிபாலன சபை தலைவர் கே.ஆறுமுகம் தலைமையில் ரூபா 50 000 பெறுமதியான  பனடோல் சிறப் (100 ml) 200 போத்தல்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

ஏழைச்சிறு குழந்தைகளுக்காக ஆலய நிர்வாகத்தினர்  இந்த மருந்து பொருட்களை கொள்வனவு செய்து வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நடராஜா அருந்திரனிடம் கையளித்தனர்.

இதேவேளை, மருந்து தட்டுப்பாட்டை தீர்க்க உதவுமாறு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நடராஜா அருந்திரன் பொதுமக்களிடம் பகிரங்க வேண்டுகோள் விடு த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages