தாயின் அன்பு கடனதீர்க்க......

posted Dec 25, 2011 2:19 AM by Arunsanth Thadsanamoorthy   [ updated Dec 25, 2011 8:43 AM by Kiruthikan Sothiswaran ]
தாயின் அன்பு கடனதீர்க்க...... - Others

தாயின் அன்பு கடனதீர்க்க...... 

தட்டு தட்டா சோறு திண்ணும் 
வயிறு நெரயல 
ஏ தாய் கொடுத்த உருண்டைசோற்றில் 
பசிய காணல..... 

பாய் விரிச்சி படுத்த போதும் 
தூங்க தோனல 
ஏ தாய் மடியில் படுத்துகிட்டே 
வேறெதுவும் தேவல..... 

கட்டு கட்டா காசிருந்தும் 
கணக்கு முடியல 
ஏ தாய் கொடுத்த ஒற்றை காசில் 
குத்தம் குறையில்ல.... 

ஆயிரந்தா உறவிருந்தும் 
கவலை தீரல 
ஏ தாய் அருகில் இருக்கும் போது 
கண்ணீர் காணல..... 

வித விதமா உடையிரிந்து 
எதுவும் பிடிக்கல 
ஏ தாய் கொடுத்த கைக்குட்டைக்கு 
நிகர் எதுவுஇல்ல..... 

காலையில கண்விழிக்கும் 
கஷ்டம் புரியல 
ஏ தாய் முகத்த பார்க்கும் போது 
நஷ்டம் அரியல..... 

சின்ன சின்ன நட்சத்திரம் 
அழகா தெரியல 
ஏ தாய் கொடுத்த பாசமுத்தம் 
இன்னும் காயல..... 

வண்ண வண்ண வானவில்ல 
பிடிக்க முடியல 
ஏ தாயின் அன்பு கடனதீர்க்க 
ஈடு இணையில்ல.....