பிரதேச கலை, இலக்கிய விழா - 2019 - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

பிரதேச கலை, இலக்கிய விழா - 2019

கலை கலாசார அலுவல்கள் திணைக்களமும்,  காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச  கலை, இலக்கிய விழா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின் தலைமையில் இன்று (26)  நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ்.விவேகானந்தராஜா அவர்களும், கணக்காளர் செல்வி.என்.ஜயசர்மிகா அவர்களும், இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி.பகிரதி மோகனராசா அவர்களும், பிரதேச செயலகத்தின் திவிநெகும தலைமை பீட முகாமையாளர் ஜனாப் எம்.எம். அச்சிமுஹம்மட் அவர்களும், நிர்வாக கிராம உத்தியோகத்தர் திரு.ச.புவனேசராஜா அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இதன்போது பிரதேச செயலாளர் அவர்களினால் "காரையொளி" மலர் வெளியிடப்பட்டதுடன் மலருக்கான நயவுரையிணை கலாசார அதிகார சபை செயலாளர் திரு.எஸ்.நாகராசா அவர்கள் உரை ஆற்றியதுடன். பிரதேச இலக்கிய விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் மற்றும் இவ்விழாவில் மாணவர்களை பங்குபற்ற செய்தமைக்காக பாடசாலைக்கான நினைவுச் சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. அத்துடன் இவ் விழா நிகழ்வுகளில் நிகழ்ச்சிகளை வழங்கிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் . இந்நிகழ்வு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.













Post Bottom Ad

Responsive Ads Here

Pages