அகிலஇலங்கை தமிழ்மொழித்தினப்போட்டியில் காரைதீவு விபுலாநந்தா மாணவி முகுர்த்தனா முதலிடம்! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

அகிலஇலங்கை தமிழ்மொழித்தினப்போட்டியில் காரைதீவு விபுலாநந்தா மாணவி முகுர்த்தனா முதலிடம்!

அகில இலங்கை தமிழ் மொழித்தின தேசிய மட்டப்போட்டியில் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி மாணவி செல்வி ரவீந்திரன் முகுர்தனா முதலிடம் பெற்றுச்சாதனை படைத்துள்ளார்.

இவர் பிரிவு 5இல் தமிழியல்கட்டுரைவரைதல் இலக்கியநயம் என்ற பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதாக கல்வியமைச்சின் தமிழ்மொழிப்பிரிவு உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி ஜி.சடகோபன் நேற்று(20) கடிதமூலம் அதிபருக்கு அறிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டிகள் கடந்த யூலை மாதம் 14, 15 ,21, 22 ஆகிய தினங்களில் கொழும்பில் நடைபெற்றது.

காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் க.பொ.த உயர்தரம் கணிதப்பிரிவில் பயிலும் செல்வி ர.முகுர்த்தனா காரைதீவைச்சேர்ந்த க.ரவீந்திரன் ச. யோகேஸ்வரி   ஆசிரியதம்பதிகளின் புதல்வியாவார்.

மாணவி.ர.முகுர்த்தனாவின் சாதனையை அதிபர் தி.வித்யாராஜன் ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை கல்விச்சமுகம் பாராட்டியுள்ளது.

(காரைதீவு  நிருபர்)

Post Bottom Ad

Responsive Ads Here

Pages